கொரோனா மற்றும் திரிபுபெற்ற டெல்டா தொற்றுக்களுக்கு எதிராக குறைந்த செயற்திறனைக் கொண்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள சீன உற்பத்தியாகிய சினோவெக் தடுப்பூசிகளில் 13 மில்லியனை கொள்வனவு செய்ய ஸ்ரீலங்கா தீர்மானித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகையொன்று இந்த தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -
சீனாவின் கொவிட் தொற்றை எதிர்க்கின்ற இரண்டு தடுப்பூசிகளாகிய சினோவெக் மற்றும் சைனோபார்ம் ஆகிய தடுப்பூசிகளுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் அவசர பயன்பாட்டிற்கு அங்கீகாரம் வழங்கியதோடு, உலக சுகாதார ஸ்தாபனமும் இதற்கான அனுமதியை அளித்திருந்தது. இருந்த போதிலும் உலகின் பல்வேறு நாடுகளும் சீனத்தடுப்பூசிகளை நிராகரித்து வருகின்றன.
- Advertisement -
குறிப்பாக சினோவெக் தடுப்பூசியானது கொவிட் தொற்றை எதிர்க்கின்ற மிகக்குறைந்த செயற்திறனைக் கொண்டதாகவே கூறப்படுகின்றது. எனினும் சைனோபார்ம் தடுப்பூசியானது, 85 சதவீதத்திற்கும் அப்பால் திரிபுபெற்ற டெல்டா தொற்றையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளதென ஸ்ரீலங்காவின் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சினோவெக் தடுப்பூசிகளில் 13 மில்லியன் தடுப்பூசிகளை இறக்குமதி செ்ய ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சினோவெக் தடுப்பூசி 15 அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்டதாக விலையிடப்பட்டுள்ளதோடு, ஏனைய கொவிட் தடுப்பூசிகளின் விலையுடன் ஒப்பிடுகையில் சினோவெக் அதிக விலைகொண்டதாக உள்ளதென்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதேவேளை, ஸ்ரீலங்காவின் தேசிய ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தடுப்பூசி பற்றியகுழுவின் மூன்று உறுப்பினர்கள், சினோவெக் தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை கடுமையாக எதிர்த்திருப்பதோடு குழுவிலிருந்தும் விலகியுள்ளனர்.