பிறந்து இரண்டு நாட்களேயான பச்சிளம் சிசு கொரோனா தொற்றுக்கு பலியாகி பெற்றோருக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. களுத்துறை பொது வைத்தியசாலையில் பிறந்த இந்த குழந்தை 28ம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிபென்ன – திப்பிட்ட பகுதியில் வசிக்கும் தாய் ஒருவர் இக்குழந்தையை பிரசவித்துள்ளார்.