யாழ்.நெடுந்தீவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கிய தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தாதியிடம் தடுப்பூசி ஏற்றிய 46 குழந்தைகள் மற்றும் குழந்தைகளுடன் சமூகமளித்த தாய்மாருக்கு கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
- Advertisement -
இதனையடுத்து குறித்த குழந்தைகள் தாய்மார் மற்றும் மருத்துவ தாதியுடன் தொடர்பு பட்டவர்களுக்கு இன்றைய தினம் அவசரமாக பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
- Advertisement -
மேலும் குறித்த மருத்துவத்தாதி வேலணையிலிருந்து நெடுந்தீவு வைத்தியசாலைக்குச் சென்று பணியாற்றி வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.