முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனிஞ்சியன்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன்(31) பிரதீபன் மாலினி (27) என்பவர்களே உயிரிழந்தவர்களாவார்.
- Advertisement -
குறித்த இருவரும் திருமணத்திற்கு முன்னர் பிரதேச வெதுப்பகம் ஒன்றில் கடமையாற்றிய போது திருமணம் செய்துள்ளனர் . திருமணமாகி 10 மாதங்கள் கடந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.