யாழில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தியை அண்மித்த பகுதியில் நேற்று (25) குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
- Advertisement -
யாழில் இருந்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று, பிரதான வீதிக்கு வர முயற்சித்த காருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த இருவர் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.