அரச உயர் அதிகாரிகள் ஆயிரம் பேருக்கு புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
- Advertisement -
அனுமதிப் பத்திரம் வெளியிடப்பட்டிருந்தாலும் புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
- Advertisement -
வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டுள்ள எவரும் அரசாங்கத்தின் தீர்மானம் நடைமுறையில் உள்ளவரை வாகனங்களை இறக்குமதி செய்ய எந்த வாய்ப்பும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். முன்னர் திட்டமிட்டிருந்தபடி இந்த வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் 2020 ஆம் ஆண்டின் ஆரம்பித்தில் வெளியிடப்பட்டது.
வாகனங்களை இறக்குமதி செய்வதில்லை என அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு பின்னர் இந்த அனுமதிப்பத்திரம் வெளியிடப்படவில்லை எனவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.