ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது சீனா. பெண்களுக்கான 10 மீற்றர் ஏர் ரைபிள் போட்டியில் சீனாவின் யாங் கியான் டினா ஜினிமாதா முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
- Advertisement -
அதேவேளை இதே பிரிவில் போட்டியிட்ட இலங்கை வீராங்கனை தெஹானி எகொடவெல 4 ஆவது இடத்தைப் பெற்று முதல் சுற்றிலேயே வெளிறேினார். வெள்ளிப் பதக்கம் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் அனஸ்தேசியா கலாஷினா கிருதிகாவிற்கும், வெண்கலப் பதக்கம் சுவிட்ஸர்லாந்தின் நினா கிறிஸ்டனுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளது.
- Advertisement -
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் நேற்று கோலகலமாக ஆரம்பமானது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்கள் இல்லாமல் இந்தப் போட்டிகள் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றன.
மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பதக்கம் வெல்லும் வீர வீராங்கனைகள் தங்களுக்கான பதக்கத்தை தாங்களே எடுத்து அணிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.