நாட்டின் கொரோனா நிலை காரணமாக வியாபார நடவடிக்கைகள் மற்றும் அவசர கால சேவைகள் ONLINE மூலம் நடைபெற்றுவருகிறது. இதனை சில விஷமிகள் சமீபகாலமாக தவறாக பயன்படுத்திவருகின்றமை அவதானிக்க கூடியதாக உள்ளது.
- Advertisement -
இணையத்தளம் மற்றும் முகப்புத்தகம் போன்றவற்றில் காணப்படும் தொலைபேசி இலக்கங்களை குறிவைத்து விஷமிகளால் இவ்வாறான மோசமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இதேபோல் சில தினங்களுக்கு முன் மாணவர்களுக்கு ONLINE மூலம் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் சூம் வகுப்புக்களை சிலர் திட்டமிட்டு குழப்பி வருவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.
- Advertisement -
இதேவேளை, குறித்த செயற்பாட்டால் பாதிப்படைந்த ஆசிரியர் ஒருவர் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.