கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நேற்று வியாழக்கிழமை நாகப் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. மருத்துவமனையின் பாதுகாப்பு ஊழியர்கள் பெரும் முயற்சிகளுக்கு பின்னர் பாம்பை பாதுகாப்பாக பிடித்து ஒரு போத்தலில் அடைத்ததாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் தலைமை செவிலியர் புஷ்பா ரம்யானி டி சோய்சா தெரிவித்துள்ளார்.
- Advertisement -
பாம்பு சுவாசிப்பதற்கு ஏதுவாக போத்தலில் சிறு துளைகள் இட்டதோடு விலங்குகளைப் பெற சம்பந்தப்பட்டோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியதாகவும் எனினும் யாரும் முன்வராத காரணத்தினால் இறுதியில் நண்பர் ஒருவர் பாம்பை ஒரு காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
வைத்தியசாலையில் பூனைகள் உள்ளிட்ட பிற விலங்குகள் இதற்கு முன்னர் தோன்றியிருந்தாலும், நாகப் பாம்பு தோன்றியது இதுவே முதன் முறை என்றும் புஷ்பா ரம்யானி டி சோய்சா சுதெரிவித்துள்ளார்.