கடந்த திங்கட்கிழமை அன்று, நவாலி – ஆனைக்கோட்டையில் பிரதான வீதி அகலிப்புப் பணிகள் முன்னெடுத்து வரும் வேளையில், அரச அதிகாரிகளுக்கும் ஊர் மக்களுக்கும் இடையே பெரும் முரண்பாடு ஒன்று ஏற்டபட்டது. வீதியினை அகலப்படுத்தும் நோக்கில் வொலி சென்.பீற்றர் முன்னாள் உள்ள நான்கு பெரிய மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் நோக்கில் அதிகாரிகள் செயற்பட்டமையினைக் கண்டித்து மக்கள் குறித்த அதிகாரிகளுடன் முரண்பட்டுள்ளனர்.
- Advertisement -
ஆனால் தற்போது இதற்கு மாறாக ஆதாரத்துடன் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. குறித்த கடிதத்தில் பாரம்பரியமாக ஊர் அடையாளங்களாக விளங்கும் வாகை மரங்களை, வெட்டி அகற்றுவதற்கு ஊர் மக்கள் மற்றும் பாடசாலை அதிபர், பாடசாலை மாணவரின் பெற்றோர், சமூக நலன் விரும்பிகள் போன்றவர்கள் தங்கள் மனப்பூர்வ சம்மதத்தை உறுதிப்படுத்தி கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை வீதி அபிவிருத்தி அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளனர்.
- Advertisement -
ஊர் பெரியார்களின் அனுமதியுடனேயே மரங்களை வெட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும் ஒரு சிலர் குழப்பங்களை ஏற்படுத்தி, வீண் முரண்பாட்டினை ஏற்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக இனி வரும் காலங்களில் தற்செயலாக மரங்கள் பாறிவிழுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் என்பதுடன், பாடசாலை கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் , உயிர் சேதங்களும் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.