கண்டி ஒகஸ்டாவத்த தோட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது பெண்ணொருவருக்கு இரண்டு தடவைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண் மயக்கமுற்ற நிலையில் கண்டி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
குறித்த பெண் தடுப்பூசி பெற்றுக்கொண்டதன் பின்னர் வீடு திரும்பிய பின்னரே மயக்கமுற்றுள்ளார். இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகிறது. இதனையடுத்து பெண்ணின் கணவர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.