ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர், திருமலை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு 4 கோடி இந்திய ரூபா மதிப்பிலான தங்க வாளை காணிக்கையாக செலுத்தியுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.எஸ். பிரசாத் நேற்று காலையில் விஐபி பிரேக்தரிசன நேரத்தில் தனது மனைவியுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
- Advertisement -
இதன்போது அவர், மூலவருக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட தங்க வாளை, தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் காணிக்கையாக வழங்கினார். 6.5 கிலோ எடை கொண்ட இந்த வாள், கோயமுத்தூரில் மிகவும் கலை நயத்துடன் தயாரிக்கப்பட்டதாகவும் பிரசாத் தெரிவித்தார்.
- Advertisement -
ஏற்கெனவே ஏழுமலையானுக்கு சூரிய கட்கம் எனும் தங்கவாள் உள்ள நிலையில் தற்போது மற்றொரு வாள் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.