12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார். மேலும், 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
- Advertisement -
நாங்கள் முதலில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டோம். பின்னர் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டோம்.
- Advertisement -
அதன்பிறகு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கும், 12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம். இதை ஒரு ஒழுங்கான முறையில் நாம் செய்ய வேண்டும் என்றார்.