இலங்கையில் அடுத்த நான்கு வாரங்களில் கோவிட் நான்காவது அலை ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதா அமைச்சு பி.சீ.அர் பரிசோதனைகளையும், மரபணு ஆய்வுகளையும் அதிகரிக்காவிட்டால் பாரிய ஆபத்து ஏற்படும் என மருத்துவ ஆய்வுகூடத் தலைவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- Advertisement -
பல்வேறு கொரோனா வகைகள் இப்போது உலகின் பல நாடுகளில் பரவி வருவதாகவும், அந்த வகையில் இலங்கையிலும் டெல்டா வகை பரவும் அபாயம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். அனுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
- Advertisement -
“டெல்டா வகை உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது. இலங்கையால் மட்டும் அதிலிருந்து விடுபட முடியும் என்று நான் நினைக்கவில்லை. எனவே, எதிர்காலத்தில் டெல்டா நம் நாட்டில் அதிகம் காணப்படும் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும், ஸ்புட்னிக் தடுப்பூசி டெல்டா வகைகளுக்கு எதிராக செயற்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எமது நாட்டில் தற்போது சைனோஃபார்ம், அஸ்ட்ராசெனெகா, மாடர்னா மற்றும் ஃபைசர் போன்றவை மக்களுக்கு போடப்படுகின்றன. அநத வகையில் தடுப்பூசி பெறுபவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் கூட, டெல்டா விகாரத்தால் பாதிக்கப்படுவது குறைவு. எனவே, தடுப்பூசி மிகவும் முக்கியமானது என்றார்.