அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதே தனது நோக்கம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதற்கு அனைவரதும் ஆதரவு அவசியம் என அவர் கூறியுள்ளார். நாளாந்த உணவுக்காக ஒரு கிலோ அரிசியை கொள்வனவு செய்ய முடியாமல் பலர் உள்ளனர். முதலில் அவர்களுக்கு சாப்பிட்ட கொடுப்போம். அந்த மக்கள் தான் எங்களுக்கு வாக்களித்தார்கள்.
- Advertisement -
மஹிந்த ஜனாதிபதியாக இருந்த போதும் நாங்கள் அதனை தான் செய்தோம். முதலில் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதே முக்கியமாக நான் செய்ய திட்டமிட்டுள்ளேன் என பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்