இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கிணற்றில் 8 வயது சிறுமியொருவர் தவறி விழுந்துள்ளார்.அதனால் சிறுமியை காப்பாற்றுவதற்காக கிணற்றின் அருகே கிராம மக்கள் திரண்டபோது, கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.
- Advertisement -
இதனையடுத்து, சுமார் 30 பேர் கிணற்றுக்குள் விழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணிகளை ஆரம்பித்தனர்.
- Advertisement -
மீட்பு பணியின் முதல் கட்டமாக கிணற்றில் வீழ்ந்து பலியான மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டதுடன், 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், இன்றுவரை 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிணற்றில் விழுந்த சிறுமியும் உயிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.