முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொலிசார் மற்றும் விமானப் படையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் கேப்பாபுலவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- Advertisement -
அவர்களது முறையற்ற தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை கண்டித்து முல்லைத்தீவு நகரம் மற்றும் கேப்பாபுலவு விமானப்படை தளத்துக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து
- Advertisement -
முல்லைத்தீவு நகர் மற்றும் கேப்பாபுலவு விமானப்படை முகாம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது கேப்பாபுலவு விமானப்படை தளத்துக்கு முன்னால் பொலிசார் விமானப்படையினர் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பும் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
இதேவேளை கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமுக்கு இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் உள்ளிட்டவர்கள் வருவதற்கு பல்வேறு வீதி தடைகளில் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.