தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க முயற்சி செய்தார் எனத் தெரிவித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -
முல்லைத்தீவு, முள்ளியவளை பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த நபரே நேற்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
- Advertisement -
திருகோணமலையை சேர்ந்த 41 வயதான சந்தேக நபர், 2019ம் ஆண்டில் இருந்து விடுதலை புலிகள் இயக்கத்தினை மீளுருவாக்கம் செய்ய முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.