குருநாகல் – கண்டி வீதியில் கடுகஸ்தோட்டை முச்சந்திக்கு இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஐந்து மாடிகளை கொண்ட வர்த்தக கட்டிடம் ஒன்று இன்று மாலை திடீரென தாழிறங்கியுள்ளது. தேசிய அனர்த்த முகாமைத்தும் மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
- Advertisement -
இந்நிலையில், மீள் அறிவிப்பு வரும் வரையில் கடுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில் கனரக வாகன போக்குவரத்திலிருந்து விலகியிருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
குறித்த கட்டிடம் தாழிறங்கியமையினால் எவ்வித உயிரிழப்புகளும் பதிவாகவில்லை என தேசிய அனர்த்த முகாமைத்தும் மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.