ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் செல்பி எடுத்தவர்கள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டனர். வட இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
- Advertisement -
இதில், ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் மொத்தம் 28 பேர் உயிரிழந்து உள்ளனர். 10 ஆடுகள், ஒரு பசு என மொத்தம் 13 கால்நடைகளும் கொல்லப்பட்டு உள்ளன.
- Advertisement -
இவற்றில், 18 பேர் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் 7 குழந்தைகள் அடங்குவர். அவர்களில் ஜெய்ப்பூரில் ஆம்பர் கோட்டை அருகே மலை பகுதியில் செல்பி எடுத்து கொண்டிருந்தவர்களும் அடங்குவார்கள். இதுதவிர 6 குழந்தைகள் உள்பட 21 பேர் காயமடைந்து உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் பல பகுதிகளில் பெய்த கனமழையில் சிக்கி 2 இளைஞர்கள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்கள் தவிர உத்தரகாண்டில் மழைக்கு 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.