இரண்டு கோவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -
இதற்கு அமைய ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணியினரில் ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் செயலாளர் கபில ஜீவந்தவுக்கு முதலாவது டிஜிட்டல் அட்டையை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச வழங்கியுள்ளார்.
- Advertisement -
சுகாதார அமைச்சு, இலங்கை தொழிநுட்ப மற்றும் தொடர்புசாதன தொழிநுற்ப முகவர் அமைப்பு என்பன இணைந்து இந்த டிஜிட்டல் அட்டையை உருவாக்கியுள்ளன.
இரண்டு கோவிட் தடுப்பூசி மருந்துகளை செலுத்திக் கொண்டவர்கள் இந்த டிஜிட்டல் அட்டையை பெற்று கொள்வதற்கான விண்ணப்பங்களை சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் மிக விரைவில் பதிவிறக்கம் செய்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியை பெற்றுக்கொண்ட நபரின் பெயர், வயது, அடையாள அட்டை இலக்கம், தடுப்பூசியை பெற்று கொண்ட தினம், பெற்று கொண்ட தடுப்பூசி வகை என்பவற்றை அந்த விண்ணப்பத்தில் கண்டறிய முடியும்.
உலகில் எந்த இடத்தில் இருந்தும் QR Code மூலம் தடுப்பூசி பெற்று கொண்டமை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தி கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.