அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அத்தியாவசிய தேவைக்காகவும், நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்கும் மற்றும் மருத்துவ சிகிச்சையை பெற்றுக் கொள்வதற்காகவும் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அத்துடன், தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய, முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளியைப் பின் பற்றத் தவறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 214 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.