இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளரான இளைஞன் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். இலங்கை காலியைச் சேர்ந்த 30 வயதுடைய குஷான் நிரோஷனா என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
- Advertisement -
இவர் விக்டோரியா மாநிலம் Ballarat பகுதியில் பொறியியலாளராக பணிபுரிந்துவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் Ballarat-இலிருந்து Colac-க்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்து சம்பவித்திருப்பதாகவும்,
- Advertisement -
இவரது கார் பிரதான வீதியிலிருந்து விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதிய நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு அவசர சேவைப்பிரிவினர் வரவழைக்கப்பட்டபோதும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுவதற்கு முன்பே இவர் மரணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் மொரட்டுவ பல்கலைக்கழகம் Civil Engineering Department-இன் Batch 12′-ஐச் சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகிறது.