ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளை பிற்போடுவது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தி தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.
- Advertisement -
அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண பாராளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
- Advertisement -
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு, மாணவர்களுக்கு சாதகமான நிலைமை ஏற்படும் விதத்தில் தாம் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்