கொழும்பில் டெல்டா கொவிட் மாறுபாடினால் பாதிக்கப்பட்ட நபர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு 02, 05, 09, 10, 14 ஆகிய பிரதேசங்களிலேயே இந்த டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
கொவிட் தொற்றாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 19 பேர் டெல்டா கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
பல்கலைக்கழகத்தில் இருந்து கிடைத்த அறிக்கை தொடர்பில் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் ஆய்வு நடத்துகின்றது. எனினும் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தொடர்பில் அறிவிப்பதில் சிக்கல்கள் உள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முதல் முறையாக தெமட்டகொட பிரதேசத்தில் கடந்த மாதம் 17ஆம் திகதி டெல்டா கொவிட் தொற்றாளர்கள் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டனர். அதன் பின்னர் டெல்டா தொற்றுக்குள்ளாகிய 14 பேர் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர்.
இலங்கையில் டெல்டா மாறுப்பாடு அதிகம் தொற்றியுள்ளதாக என ஆராய பரவலான PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.