எமது நாட்டை முற்றுமுழுதாக நாசம் செய்யும் செயற்பாட்டை ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
எமது செய்திச் சேவையின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
- Advertisement -
உலக வல்லரசு நாடுகள் அனைத்தும் ஆசியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. அனைத்து வளங்களும் ஆசியாவிலேயே இருக்கின்றன.
அதனால் சிய கண்டத்தினுள் பிரவேசித்து பகிர்ந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் நாங்கள் ஒருபுறம் சீனாவுக்கும் மறுபுறம் இந்தியாவுக்கும் இடையிலான பொறியில் சிக்கித் தவித்து கொண்டிருக்கின்றோம் என அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்