கொழும்பு − கிருலபனை − பூர்வாராம ரயில் கடவையில், நேற்று மாலை கார் ஒன்றுடன் ரயில் மோதுண்டதில் இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த இரு பெண்களும் சிகிச்சைகளுக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Advertisement -
நுகேகொடை ரயில் நிலையத்திலிருந்து உரிய சமிக்ஞை கிடைக்காத நிலையில், பாதுகாப்பு கடவை மூடப்படவில்லை என ரயில் கடவை பாதுகாவளர் தெரிவித்துள்ளார். கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள வேலைத்தளத்திலிருந்து மஹரகம பகுதியிலுள்ள தமது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போதே, இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
- Advertisement -
கொழும்பிலிருந்து பாதுக்கைக்கு சென்ற ரயிலே காருடன் மோதியுள்ளது. சுமார் 8 அடி தூரத்திற்கு கார் இழுத்துச்செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் கிருலபனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.