கண்டியில் ஒரேநாளில் 12 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28970ஆக அதிகரித்துள்ளது. மத்திய மாகாணத்தில் நேற்று மாத்திரம் 118 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
- Advertisement -
அவர்களில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேரும். மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த 03 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 97 பேரும் அடங்குகின்றனர். கண்டி மாவட்டத்திலேயே இதுவரை அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் உள்ளனர்.
- Advertisement -
அதற்கமைய அந்த மாவட்டத்தில் 15525 பேர் இதுவரை இனங்காணப்பட்டிருக்கின்றனர். மேலும் நேற்றுடன் முடிந்த 24 மணிநேரத்திற்குள் மத்திய மாகாணத்தில் 12 கொரோனா உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதுடன், அவர்கள் அனைவரும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.