கல்கிசையில் 15 வயதான சிறுமி ஒருவர் இணையத்தளம் ஊடாக பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- Advertisement -
மேலும் இவ்வாறு கைதானவர்களில் இலங்கையின் முக்கிய இருதய சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவரும் அடங்குவதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
எனினும் இதன்படி இந்த சம்பவம் தொடர்பாக கைதானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.