நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ வாகனம் ஒன்றுடன் எரிபொருள் பவுஸர் ஒன்று மோதியதில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை பாதெனிய – அனுராபுரம் வீதியின் அம்பகஸ்வெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
விபத்தில் காயமடைந்த மேலும் 5 இராணுவத்தினர் மஹவ மற்றும் குருணாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் விஷ்வமடு இராணுவ முகாம்களில் இருந்து 7 இராணுவத்தினரை அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
பவுஸர் ஓட்டுனரின் தூக்க கலக்கம் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் விபத்து சம்பவம் தொடர்பில் பவுஸர் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.