85 பயணிகளுடன் பயணித்த பிலிப்பைன்ஸ் விமானப் படைக்கு சொந்தமான C130 ரக விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமானம் பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
தொழில்நுட்ப கோளாறு தென் பிலிப்பைன்ஸில் ஜோஜோ தீவில் தரையிறங்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தீப்பற்றிய விமானத்திலிருந்து 40 பயணிகளை மீட்க முடிந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.