வட மாகாணத்தில் ஆவா அல்லது வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் கும்பல் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை என வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தர்மரத்ன தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அண்மையில் கோண்டாவில் பகுதியில் பாரிய மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த 14 பேர் கொண்ட குழுவின் தாக்குதலில் 7 பேர் காயமடைந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
எனினும் இந்த மோதல் ஆவா குழு அல்லது வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் கும்பலின் செயல் என கூற முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதலில் 7 பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் இருவரின் நிலைமை ஆபத்தாக உள்ளதென தகலவ் வெளியாகியுள்ளது.