திருகோணமலை-கிண்ணியா கூபா நகரில் 7 வயது சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை பகல் உணவை உண்ட பின்னர் சிறுவன் தூங்கியுள்ளார்.
- Advertisement -
அதன்பின்னர் மீண்டும் சிறுவனை எழும்பிய போது மயக்கமுற்ற நிலையில் இருந்ததையடுத்து கிண்ணியா தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. உயிரிழந்த சிறுவன் கிண்ணியா கூபா நகர் பகுதியைச் சேர்ந்த நளீம் முகம்மட் நஸ்மிர் (07வயது) எனவும் தெரியவருகின்றது.
- Advertisement -
குறித்த சிறுவன் மரணித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் சிறுவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
எனினும் சிறுவன் மரணத்திற்கான காரணம் என்ன என்று தெரியாத பட்சத்தில் சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவக்குமாறு கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.முகம்மது ஷாபி கிண்ணியா பொலிசாருக்கு அறிவுறுத்தினார்.
இதேவேளை சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனையின் நிறைவடைந்தவுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.