புதிய முறையில் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சிறுமி ஒருவரை பயன்படுத்தியே இந்த கொள்ளையடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- Advertisement -
நாட்டின் பல இடங்களில் உள்ள தங்க நகை கடைகளில் கொள்ளையடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கும்பல் புறக்கோட்டை பொலிஸாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- Advertisement -
கைது செய்யப்பட்ட கும்பலில் பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
அவர்களில் ஒருவர் 46 வயதுடையவர் எனவும் மற்றைய பெண் 23 வயதுடையவராகும். இந்த கும்பலில் 79 வயதுடைய ஆண் ஒருவரும் இணைந்து செயற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.