யாழ்.பருத்தித்துறை – தும்பளை பகுதியில் வீட்டில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அவருடைய வீட்டில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- Advertisement -
73 வயதான முதியவர் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் முதியவரின் வீட்டு சூழலில் ஏற்கனவே ஒரு குடும்ப பின்னணியில் உள்ள 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
- Advertisement -
இதை அடிப்படையாக கொண்டு சந்தேகமடைந்த பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் இறந்த முதியவரின் உடலம் மீதும் அவருடைய நெருங்கிய உறவினர்களுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் படி உயிரிழந்தவருக்கும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் 3 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து இறந்தவரின் சடலம் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய, கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. மேலும் மரண வீட்டுக்கு சென்றுவந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தவும் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.