ஆங்கில மொழி ஆற்றல் இன்மையால் இளைஞர்கள் பல தொழில்களில் இருந்து விலகியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இதன்காரணமாக தொழில் சந்தையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
பல தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ள போதிலும் முதலாம் வகுப்பில் இருந்து உயர்தரம் வரை ஆங்கில மொழியில் கல்வி வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை எதிர்காலத்தில் முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்..
தங்களின் பிள்ளைகளுக்கு ஆங்கில மொழியில் கல்வி கற்பதற்கு அனுமதிக்கும் பலர் நாட்டின் சாதாரண மக்களின் பிள்ளைகளுக்கு ஆங்கில மொழியில் கல்வி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடுவது வருத்தமாக உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.