அண்மையில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டு வாசலில் இளைஞர் ஒருவர் வியாழேந்திரனின் மெய் பாதுகாவலரினால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
- Advertisement -
கொலையை செய்தவர் பொலிஸ் சேவையை சேர்ந்தவர் என்பதாலும் மட்டக்களப்பு பொலிஸார், அமைச்சரின் மெய் பாதுகாவல் என்பதாலும் பாதுகாக்க முயட்சிகளை எடுத்து வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
உயிரிழந்தவர் துப்பாக்கியால் சுட்டதால் இறக்கவில்லை அவர் கீழே விழுந்ததால் மண்டை உடைந்து இறந்தார் என்று மரண பரிசோதனை அறிக்கையினை (JMO Report)மாற்றி உள்ளனர்.
இதன்படி மரணமடைந்தனர் துப்பாக்கி சூட்டால் இறக்கவில்லை. கீழே விழுந்ததால் தான் இறந்துள்ளார் என பொலிஸ் தரப்பில் நீதிமன்றில் சொல்லுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன.
மட்டக்களப்பு பொலிஸார் கொலைச்சம்பவம் தொடர்பான பல விடயங்களை மறைக்க முற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று கொலையாளியின் குடும்பத்தாரை இரகசிய இடத்தில் சந்தித்த அரசியல் பிரகர் ஒருவர் , கொலையாளியை விரைவில் விடுவித்து தருவதாகவும், மீண்டும் மெய்ப் பாதுகாவலர் பணியினை தொடர முடியும் எனவும் அதுவரை பொறுமையாக இருக்குமாறும் கூறிச் சென்றதாக கொலையாளியின் தந்தையார் கூறியதாக தகவல்களை தெரிவிக்கின்றன.
அரசியல் முக்கியஸ்தரின் உத்தரவுக்கு அமைய கொலையாளியின் மட்டக்களப்பு வீடு,vகடை, பண்ணை என்பவற்றிக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை ,குறிப்பிடத்தக்கது.