யாழ்ப்பாணம் – கொக்குவிலில் வீடுகளில் புகுந்த வாள்வெட்டுக் குழுவொன்று வீட்டிலுள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
- Advertisement -
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
- Advertisement -
கொக்குவில் மேற்கு வராகி அம்மன் கோவிலடியில் இரண்டு வீடுகளில் புகுந்த வாள்வெட்டுக் குழுவொன்று வீட்டிலுள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளது.
6 மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் சகிதம் வச்திறங்கிய 9 பேர் கொண்ட குழுவொன்று இரண்டு வீடுகளுக்குள் புகுந்து வீட்டிலிருந்த பொருட்;களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
வீட்டிலிருந்தவர்களையும் அச்சுறுத்தி விட்டு குறித்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.