கொழும்பின் புறநகராகிய கஹத்துடுவ பிரதேசத்தில் டெல்டா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்டஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பிலிருந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- Advertisement -
குறித்த பிரதேசம் தற்சமயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு 100 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
- Advertisement -
இந்த நிலையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 100 பேரில் 70 பேருக்கு நேற்று பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் 4 பேருக்கு தொற்று உறுதியானது.
எனினும் அவர்களுக்கு டெல்டா திரிவு ஏற்பட்டிருப்பதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.