வடக்கில் சீன நிறுவனம் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடுவது வெளிச்சமாகியுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
எமது கடல்வளத்தை வெளிநாட்டவர்கள் சுரண்டும் நிலை உருவாகியுள்ளது எனவும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- Advertisement -
பூநகரி கௌதாரிமுனை பகுதியில் சீன நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அட்டை வளர்ப்பு தொடர்பில் மக்களின் நிலைப்பாடுகளை கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.