சீன இராணுவத்தை இந்த நாட்டிற்கு எவ்வாறு வழரவழைத்தார்கள்? வேறு நாட்டு இராணுவத்தை உள்நாட்டு விடயங்களில் எவ்வாறு ஈடுபடுத்தினார்கள் என சிங்கள ராவய அமைப்பினைச் சேர்ந்த அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
- Advertisement -
இந்த நாட்டின் இறையாண்மை மற்றும் சுயாதீனத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயமல்லவா இது? இதற்கு பொறுப்புக்கூறப்போது யார்? இரு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் எல்.ரி.ரி.ஈ உடையை அணிந்து பணியாற்றிக்கொண்டிருந்தார்கள் என்ற காரணத்திற்காக, சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நாட்டின் பிரஜைகளை கைது செய்தார்கள். எனினும் சீன இராணுவத்தை நாட்டிற்கு அழைத்து வந்தவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஏன்? 69 இலட்சம் வாக்குகளை வழங்கி சமல் ராஜபக்சவிற்கு இந்த அதிகாரத்தை வழங்கப்பட்டுள்ளதா? என நாம் கேட்க விரும்புகின்றோம்.
இந்த நாட்டின் சட்டம் இன்று கேலிக்குரியதாக மாறியுள்ளது. சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்கள். சீனா இராணுவத்தை நாட்டிற்கு அழைத்து வந்தமை தவறு. வாவி ஒன்றை புனரமைக்கும் இயலுமை எமக்கில்லையா? சீனாவிற்கு இதனை எவ்வாறு ஒப்படைத்தார்கள்.
நாட்டில் பலர் ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாயை உழைத்துக்கொள்ளவே கஷ்டப்படும் இந்த நிலைமையில், தொல்பொருள் சட்டத்தை மீறி சீனர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்தப் பணிகள் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் எடுத்த நடவடிக்கை என்ன?
தொல்பொருள் சட்டத்தை மீறி, தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு எடுத்த நடவடிக்கை என்ன? நீர்ப்பாசனத் திணைக்களம் எடுத்த நடவடிக்கை என்ன?
இதுத் தொடர்பில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை என்ன? தற்காலிகமாக நியமனம் பெறும் அமைச்சருக்கு இதில் பொறுப்பில்லாமல் இருக்கலாம் எனினும், திணைக்களங்கள் இதுத் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டும். இதற்கு எதிராக மக்கள் ஒன்றுத்திரளுவார்கள். கொரோனா தொற்று காரணமாக மக்கள் வீதிக்கு இறங்கமாட்டார்கள் என நினைத்தால் அது தவறு என குறிப்பிட்டுள்ளார்.