வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடையே, பதிவாகும் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமை தொடர்பில், அதிக அவதானம் செலுத்துவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- Advertisement -
நாட்டில் நேற்று தொற்றுறுதியான ஆயிரத்து 867 பேரில், 100 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.
- Advertisement -
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.