அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள தமிழ் ஆசாமிகள் சிலர், சமூக சேவையின் பெயரில் போலி முகநூல் கணக்குகளை ஆரம்பித்து வருகின்றனர்.
- Advertisement -
அவ் ஆசாமிகள் புலம் பெயர் வாழ் தமிழர்களிடமும் இலங்கையில் வாழும் வசதி படைத்த மக்களிடமிருந்தும் தொடர்பை ஏற்படுத்தி, வறுமையால் பாதிக்கப்பட்ட மற்றும் தாய் தந்தை உறவுகள் இல்லாத சிறுவர்களுக்கும் உதவி செய்யுமாறு இரக்க எண்ணத்துடன் பண உதவி கேட்டு கொண்டனர்.
- Advertisement -
இரக்ககுணம் மிகுந்த பலர், இவ் ஆசாமிகளின் கதையை நம்பி பணத்தை வாரி இறைத்துள்ளனர். சிறிது மாதங்கள் கழித்து, பண உதவி செய்தவர்கள் இவ்வாறு முகநூலின் பெயரில் சிறார்களுக்கு உதவி கிடைத்துள்ளதா என விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அவ்வாறு சமூக சேவை நிறுவனங்கள் இல்லை எனவும், இவை போலி முக நூல் கணக்கு எனவும் அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.
“சிறுவர்களுக்கு உணவு கொடுக்க முடியுமா” என்று கேட்டு பணம் பெற்று ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் கீழ்தரமமான செயற்பாடுகளால் இனி வரும் காலங்களில் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்ய யாரும் முன் வர மாட்டார்கள்.
இவ்வாறான தவறான எண்ணம் கொண்டவர்கள் தங்களின் ஆடம்பர வாழ்க்கைக்காக சிறுவர்களின் பெயரை பயன்படுத்தி கொண்டது மிகவும் மன வருத்தத்திற்குரிய விடயமாகும்.
இனி வரும் காலங்களில் நன்றாக ஆராய்ந்த பின்னரே நிதி உதவிகளை வழங்குமாறு, பாதிக்கப்பட ஒருவரால் முகநூல் கணக்கில் பகிரப்படிருந்தது.