கிளிநொச்சி கரடிப்போக்கு பூநகரி இணைப்பு வீதியில் இன்று (27.06.2021) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
- Advertisement -
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
- Advertisement -
விடுமுறைக்கு வீடு சென்று மோட்டார் சைக்கிளில் கடமைக்கு திரும்பிக்கொண்டிருந்த இவர், கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தி ஊடாக பூநகரி பரந்தன் வீதிக்கு இணைப்பு வீதி ஒன்றின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்தவேளை குறித்த விபத்து இடம்பெற்ற பகுதியில் வீதி வளைவு காணப்படும் நிலையில் அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் உள்ள சிமெந்து கட்டில் மோதுண்டு இவ்விபத்து இடம் பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர் யாழ் பொலிஸ் நிலைய நீதிமன்ற பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய P.S குமாரசிங்க என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்று சுமார் ஒரு மணி நேரம் சடலம் வாய்க்கால் பகுதியில் காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து வீதியால் பயணித்தவர்கள் பொலிசாருக்கு விபத்து இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தகவல் வழங்கியதை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.