யாழ்ப்பாணம் காரைநகர் J/47 கிராம சேவகர் பிரிவில் ஒருபகுதி முடக்கப்பட்டுள்ள நிலையில் காரைநகர் பிரதேச மருத்துவமனைக்கு நோய் அறிகுறிகளுடன் சென்ற பலருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -
காரைநகரில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சிலர் காணப்பட்ட நிலையில் அவர்களின் பி.சி.ஆர் மாதிரிகள் பிரதேச மருத்துவமனை ஊடாக பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளை சுமார் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
- Advertisement -
இதையடுத்து குறித்த பகுதி தேசிய கொரோனா தடுப்பு செயலணியால் முடக்கப்பட்டிருந்தது.
இதேவேளை அந்த பகுதியைச் சேர்ந்த பலர் தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு சென்றதாகவும், அவர்களுக்கு கடந்த 25 ஆம் திகதி பெறப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை எனறும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் தொற்று அறிகுறிகளுடன் அவர்கள் வீடுகளிலேயே தங்கவைக்கப்பட்டிருக்கும் நிலையில், பனடோல் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.