குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் மூலமும் அதேபோன்று மாத்தறை, வவுனியா, கண்டி, குருணாகல் ஆகிய பிராந்திய அலுவலகங்கள் மூலமும் சகல சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களையும் பேணியவாறு, மட்டுப்படுத்தப்பட்ட வகையில் வெளிநாட்டுக் கடவுச் சீட்டு வழங்கல் சேவையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
அதற்கமைய அத்தியாவசிய தேவையுள்ள சேவைபெறுனர்கள் மாத்திரம் கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு, திகதியை முன்பதிவு செய்து கொண்டு தமக்கு அண்மையிலுள்ள அலுவலகத்துக்கு வருகை தர முடியும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்திருக்கிறார்.
- Advertisement -
அதேவேளை மேற்குறிப்பிட்டவாறு திகதியை முன்பதிவு செய்துகொள்ளாமல் வருகைதருபவர்கள் அலுவலக வளாகத்துக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்படாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.