இலங்கையில் கொழும்பு துறைமுகம் அருகே, 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், அதாவது 10 ஆயிரத்து, 39 கோடி ரூபாய் செலவில், துறைமுக நகர் ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது.
- Advertisement -
கடலில் மண்ணை கொட்டி மேடாக்கி, செயற்கை தீவாக இது உருவாக்கப்படுகிறது. இலங்கை வரைபடத்துக்கு வெளியே, ஒரு தனி நிலப்பரப்பை உருவாக்கும் அதிபயங்கர திட்டம் இது.
- Advertisement -
இலங்கையின் வரைபடத்தையே மாற்றும் முயற்சி என்று சொல்லலாம். இலங்கையின் திட்டங்களில் சீனா பங்கேற்றிருப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லையென பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.