நுகர்வோர் சேவை அதிகார சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
- Advertisement -
வர்த்தக அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலை மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில், அதற்கான அபராதத்தை விதிப்பதற்கான சட்ட ஒழுங்குவிதிகளை உள்ளடக்கி சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் குறிபபிட்டுள்ளார்
இதற்கமைய, அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்படும் உச்சப்பட்ச சில்லறை விலையை மீறி செயற்படுபவர்களுக்கு, ஒரு இலட்சம் ரூபா அபராதமும், சந்தர்ப்பங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அபராதத் தொகையை நிர்ணயிப்பதற்கும் நுகர்வோர் சேவை அதிகார சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.