இலங்கையில் அண்மையில் சீன பிரஜைகள் கடனட்டை விவகாரத்தில் சிக்கியத்தைத் தொடர்ந்து, மீண்டும் மற்றுமொரு விவகாரத்தில் பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.
- Advertisement -
தற்போது உபகரணங்கள் என தெரிவித்து, சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குக் இறக்குமதி செய்யப்பட்ட 20.4 மில்லியன் ரூபாய் சிகெரட்டுகள் இன்று புதன்கிழமை , கொழும்பு துறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.
- Advertisement -
40 அடி நீளமான 2,76,000 சிகெரட்டுகள், 60 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயருக்கு, இவை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.