தமது நாட்டில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று இல்லை என உலக சுகாதார அமைப்பிடம் வட கொரியா தெரிவித்துள்ளது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பிடம், வட கொரியா அளித்துள்ள அறிக்கையில், ஜூன் 10ம் திகதி வரை அறிகுறிகளுடன் இருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை சோதனை செய்ததாகவும், அதில் எவருக்கும் தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
- Advertisement -
ஆனால் மோசமான சுகாதாரக் கட்டமைப்பு, சீனாவுடன் எல்லைப் பகிர்வு, எந்த ஒரு பொருளாதாரத் தேவைக்கும் சீனாவைச் சார்ந்திருக்கும் வடகொரியாவில் கொரோனா தொற்று இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உலக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஐயம் எழுப்பியுள்ளனர்.